For Daily Alerts
Just In
உலக நன்மைக்காக ஜெயேந்திரர் சிறப்பு பூஜை
கலவை:
உலக நன்மைக்காக கலவை சங்கர மடத்தில் ஜெயேந்திரர் சிறப்பு பூஜை செய்தார்.
சங்கராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்குகளில் ஜாமீனில் விடுதலையாகியிருக்கும்ஜெயேந்திர்ர கலவை சங்கரமடத்தில் தங்கியிருக்கிறார். அவரை தினமும் பக்தர்கள் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்கள்.
இந் நிலையில்
உலக மக்கள் நலமாகவும், அமைதியாகவும் வாழ இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாக சங்கர மடத்தின் நிர்வாகிகள்நிருபர்களிடம் தெரிவித்தனர்.
ஜெயேந்திரருடன் தம்பி சந்திப்பு:
இதற்கிடையே ஜெயேந்திரரை அவரது தம்பி ராமகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
ஜெயேந்திரர் நலமாக இருக்கிறார். கடவுளின் பூர்ண அருள் அவருக்கு இருக்கிறது. அதனால்தான் அவர் நலமாக இருக்கிறார்.தொடர்ந்து மெளன விரதத்தில் இருந்து வருகிறார் என்றார்.
Comments
Story first published: Sunday, February 6, 2005, 5:30 [IST]