For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கெளசல்யன்: கருணா மீது இலங்கை புகார்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர் கெளசல்யன் உள்ளிட்டோரை புலிகள் அமைப்பில் இருந்து விலகி தனியே செயல்பட்டுவரும் கருணா கோஷ்டியினரே படுகொலை செய்திருக்க வேண்டும் என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.கெளசல்யன் உட்பட 5 புலிகள் திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக புலிகள் கூறுகையில், இலங்கை ராணுவத்தின் உதவியுடன் இந்த படுகொலை நடந்துள்ளது. இது கடந்த 2002ம்ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும். அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிக்கு இது நிச்சயம்பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கு இலங்கை ராணுவம்,

அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு புலிகளின் தலைவர்கள் செல்லும்போது உரிய பாதுகாப்பை அரசு வழங்கியிருக்கிறது.புலிகள் அமைப்பில் இருந்து விலகி தனியே செயல்பட்டு வரும் கருணா கோஷ்டியினர் இக் கொலையை செய்திருக்கலாம் என்றுதெரிவித்துள்ளது.

கருணா கும்பலே ராணுவத்தினர் உதவியுடன் தான் செயல்பட்டு வருகின்றனர் என புலிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X