ரூ. 100 கோடி மான நஷ்ட வழக்கு: சுவாமி மிரட்டல்
மதுரை:
ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான வழக்குகளை தமிழக அரசு கைவிடாவிட்டால் ரூ. 100 கோடி கோரி மான நஷ்ட வழக்குப்போடுவேன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மிரட்டியுள்ளார்.
மிரட்டல் அறிக்கைகள், தடாலடி பேட்டிகள் கொடுப்பதில் வல்லவரான சுப்பிரமணியம் சுவாமி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதிலிருந்துதமிழக அரசு மீது சரமாரியாக கண்டனக் கணைகளை வீசி வருகிறார்.
இந் நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொடுத்த நிர்பந்தம்காரணமாகத்தான் ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்குபோட்டுள்ளார். இந்த வழக்குக்கு அடிப்படை ஆதாரமே இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி விட்டது.
உச்ச நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியுள்ளன. எனவே இதை அடிப்படையாக வைத்து சங்கராச்சாரியார்கள்மீதான வழக்குகளை தமிழக அரசு உடனடிாயக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். ஆகியஅமைப்புகளுடன் சேர்ந்து ஜனதாக் கட்சி பெரும் போராட்டத்தில் ஈடுபடும்.
வழக்குகளை அரசு வாபஸ் பெறாவிட்டால் தமிழக அரசு மீது ரூ.100 கேட்டு மான நஷ்ட வழக்கும் போடுவேன்.
எஸ்.பி. பிரேம்குமாரை உடனடியாக மாற்ற வேண்டும். அவர் மீதே பல வழக்குகள் உள்ளன. நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்பிரேம்குமார் என்றார் சுவாமி.