For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குருமூர்த்திக்கு பிரேம்குமார் அனுப்பிய 62 ரூபா!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Premkumarதன்னிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்த வீடியோவின் காப்பியைத் தரக் கோரி ரூ. 1,000த்துக்கு காசோலை அனுப்பியசுதேசி ஜாக்ரன் மன்ச் ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்திக்கு எஸ்பி பிரேம்குமார் பதிலுக்கு ரூ. 62க்கு டி.டி. அனுப்பியுள்ளார்.

தன்னிடம் எஸ்.பி. பிரேம்குமார் காஞ்சிபுரத்தில் வைத்து நடத்திய விசாரணையின் வீடியோ பதிவை வழங்க வேண்டும் என்று கோரி தனதுவழக்கறிஞர் மூலம் பிரேம்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய குருமூர்த்தி, இதற்காக ரூ. 1,000க்கான காசோலையையும் இணைத்துஅனுப்பியிருந்தார்.

இதையடுத்து பொய் சாட்சி கூறியது, வழக்கை திசை திருப்பும் வகையில் தகவல்கள் தந்தது ஆகியவை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்குருமூர்த்தி மீது வழக்குகள் பதிவு செய்தார் பிரேம்குமார். இந்த வழக்கில் அவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், குருமூர்த்தி சென்னையை விட்டு அகன்றுவிட்டார். அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால்,நான் தலைமறைவாகவில்லை, மும்பையில் இருக்கிறேன், இதோ என் செல்போன் நம்பர் என்று போலீசாருக்கு பதில் தந்திருக்கிறார்குருமூர்த்தி.

இந் நிலையில் குருமூர்த்தி அனுப்பிய செக்குக்கு பதிலடியாக எஸ்பி. பிரேம்குமார் ஒரு டி.டி. அனுப்பியுள்ளார்.

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில், பொய் சாட்சி சொன்ன உங்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதனால் நீங்கள்காஞ்சிபுரத்துக்கு விசாரணைக்காக வர வேண்டும்.

நீங்கள் (குருமூர்த்தி) இருக்கும் மயிலாப்பூரில் இருந்து கோயம்பேட்டுக்கு பஸ் செலவு 3 ரூபாய். அங்கிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்து செல்லபஸ் டிக்கெட் செலவு 46 ரூபாய்.

காஞ்சிபுரத்தில் மத்தியான சாப்பாடு செலவு 16 ரூபாய். கோயம்பேட்டில் இருந்து மறுபடியும் மயிலாப்பூர் செல்ல மீண்டும் செலவு 3 ரூபாய்.

ஆக மொத்தம் இந்தக் கடிதத்துடன் 62 ரூபாய்க்கு டி.டி. அனுப்பியுள்ளேன்.

இவ்வாறு பிரேம்குமார் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X