கூட்டணி ஆட்சியை விரும்பவில்லை: ராமதாஸ்
நாமக்கல்:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை பாமக ஒருபோதும் விரும்பியதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியே அமைய வேண்டும் என பா.ம.க. கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தநிலையில், காங்கிரசும் இதே கோரிக்கையை கையில் எடுத்துள்ளது.
இந் நிலையில் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், கூட்டணி ஆட்சியில் பாமகவுக்குஆசையோ, விருப்பமோ இல்லை. அதுகுறித்து பேச இது சரியான நேரம் அல்ல.
அரசியல் கூட்டணி வேறு, தேர்தல் கூட்டணி வேறு. தொகுதிப் பங்கீட்டு முறையில்தான் இதுவரை தேர்தல்கூட்டணியை பாமக அமைத்துள்ளது. வரும் தேர்தலிலும் இதுவே நீடிக்கும்.
தேர்தலுக்கு முன்பாகவே யாரும் நிபந்தனை விதிக்கக் கூடாது. அது சரியான அணுகுமுறையும் இல்லை.
அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கம். அதிமுகவுடன் எந்தக் கூட்டணியும்வைக்க மாட்டோம். சூரியன் கூட இடம் மாறி உதிக்கலாம், மறையலாம். ஆனால், நாங்கள் அதிமுகவுடன் கூட்டணிவைக்க மாட்டோம்.
பத்து மற்றும் பிளஸ் டூ தேர்வுகளின்போது இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது.மாணவர்களின் நலன் கருதி கிரிக்கெட் போட்டிகளை வேறு தேதிகளில் நடத்த நடவடிககை எடுக்க வேண்டும். அதுமுடியாவிட்டால் டிவியில் நேரடி ஒளிபரப்பைக் காட்டக் கூடாது என்றார் ராமதாஸ்.