For Daily Alerts
Just In
ஜெயலட்சுமியிடம் மீண்டும் சிபிஐ விசாரணை
மதுரை:
ஜெகஜால ஜெயலட்சுமியிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஏட்டில் ஆரம்பித்து எஸ்.பி வரை 20க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் தன்னை சீரழித்து விட்டதாக கூறிய ஜெயலட்சுமியின் புகார் குறித்துசிபிஐ விசாரித்து வருகிறது.
விசாரணை கிட்டத்தட்ட முடிவை நெருங்கிவிட்ட நிலையில் இன்று மீண்டும் ஜெயலட்சுமியிடம் விசாரணை தொடங்கியது.
ஜெயலட்சுமியின் புகார்கள் குறித்து காவல்துறையினரிடம் சிபிஐ விசாரணை நடத்தி முடித்துவிட்டது. அவர்கள் தெரிவித்த தகவல்களின்அடிப்படையில் தற்போது ஜெயலட்சுமியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாத்து வருவதாகத் தெரிகிறது.
விரைவில் இந்த விசாரணைகள் முடிந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
Comments
Story first published: Saturday, February 26, 2005, 5:30 [IST]