தமிழக சட்டசபைக்கு தேர்தல் எப்போது? கிருஷ்ணமூர்த்தி விளக்கம்
கோவை:
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற இயலாதுஎன்று தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிமுழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை வைத்து சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வருமா என்ற யூகக்கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு இதுவரை 22 பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம். அதுகுறித்துஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் சுயேச்சையாக செயல்படும் அமைப்பு. அதற்கென்று செயல் திட்டம் உள்ளது. அதன்அடிப்படையில் தேர்தல் ஆணையம் செயல்படும்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரியான முறையில் திருத்தப்பட்டு தயாரிக்கப்படும் என்றார்.