புலிகள் மீதான தாக்குதல்: விசாரிக்க கமிஷன்
கொழும்பு:
எங்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அமைதி ஒப்பந்தத்தை மீறுவோம் என்று விடுதலைப் புலிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளதையடுத்து, இந்தத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க 2 நதிபதிகள் கொண்ட கமிஷனை அதிபர் சந்திரிகாஅமைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் சமீபகாலமாக விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த திங்களன்று கிழக்குப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 3 பெண்கள் மீது தாக்குதல்நடத்தப்பட்டது. அடிக்கடி நடக்கும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு இலங்கை அரசும் அவர்களது பாதுகாப்பில்உள்ள கருணா கோஷ்டியுமே காரணம் என்று விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந் நிலையில், தங்கள் மீது இனியும் தாக்குதல் தொடர்ந்தால் அமைதி ஒப்பந்தத்தை மீறுவோம் என்று விடுதலைப்புலிகள், இலங்கை அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த 2 உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்க அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் இந்த விசாரணைக் கமிஷனை ஏற்க விடுதலைப்புலிகள் தயாராக இல்லை. சந்திரிகாவின் உண்மைமுகத்தை அறிந்தவர்கள் என்பதால், நார்வே தூதுக்குழுவினர் தான் எங்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணைநடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று புலிகள் கோரியுள்ளனர்.