மிஸ் இந்தியா போட்டியில் சென்னை பெண்
சென்னை:
பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டிக்கு சென்னையைச் சேர்ந்த ஷம்சாத் பேகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்து கொள்ள சென்னையை சேர்ந்த 23 பெண்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சென்னையைச் சேர்ந்த ஷம்சாத் பேகமும் ஒருவர். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம். படித்துள்ள இவர், பல முன்னணிநிறுவனங்களுக்கு மாடலிங் செய்துள்ளார்.
2002ம் ஆண்டு தென்னிந்திய அழகிப் போட்டியில் வென்றுள்ள இவர், இந்த வருடம் இந்திய அழகிப் பட்டத்தையும் வெல்வேன் என்றுநம்பிக்கையுடன் கூறுகிறார்.
போட்டியின் போது நான் அணிய வேண்டிய ஆடைகளை பிரபல பேஷன் டிசைனர்களான சிட்னி, சைதன்ய ராவ், அருணா ராவ், ரிச்சா, டினாவின்சென்ட், ரெஹான் ஆகியோர் வடிவமைத்து வருகின்றனர்.
இந்திய அழகிப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு எனது தந்தை மிகவும் ஊக்கமளித்து வருகிறார்.எதிர்காலத்தில் ஆடிட்டர் ஆவது தான் எனது லட்சியம் என்றார் ஷம்சாத்.
2001ம் ஆண்டு இந்தப் போட்டியில் பங்கேற்று தோல்வி கண்டவர் தான் த்ரிஷா. அந்த ஆண்டில் செலினா ஜேட்லி வென்றுவிட்டார்.