உலகின் 3வது பெரும் பணக்காரர் லட்சுமி மிட்டல்
நியூயார்க்:
உலகின் பெரும் பணக்காரர்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார் இந்தியரான லட்சுமி மிட்டல்.
முதலிடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ், இரண்டாவது இடத்தில் அமெரிக்கத் தொழிலதிபரானவாரன் பபே ஆகியோர் உள்ளனர்.
உலக பணக்காரர்களின் பட்டியலை பிரபல அமெரிக்க இதழான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில் பில் கேட்ஸ், தொடர்ந்து 11வது ஆண்டாக தனது முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார். இவரதுசொத்து மதிப்பு, 46.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அமெரிக்கத் தொழிலதிபரான வாரன் பபேவிடம் 44 பில்லியன் அமெரிக்கடாலர் சொத்துக்கள் உள்ளன.
இவர்களுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தைப் பிடித்துள்ளார் உலகெங்கும் இரும்பு, எஃகு தொழிற்சாலைகளைவாங்கிக் குவித்து வரும் லண்டனில் வசிக்கும் இந்தியரான லட்சுமி மிட்டல்.
இவரது சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இவரது சொத்து 18.8பில்லியன் டாலர்களாக இருந்தது. அப்போது இவர் 62வது இடத்தில் இருந்தார். ஒரே வருடத்தில் 59 பேரைபின்னுக்குத் தள்ளிவிட்டு இவர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
மெக்ஸிகோவைச் சேர்ந்த கார்லோஸ் 4வது இடத்தை பிடித்துள்ளார். இவர் கடந்த வருடம் 17வது இடத்தில்இருந்தார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்வலீத் பின் தலால் 5வது இடத்திலும், ஸ்வீடனைச் சேர்ந்த இங்க்வாட்கம்ப்ராட் 6வது இடத்திலும் உள்ளனர்.
விப்ரோ தலைவர் ஆஸிம் பிரேம்ஜி 38வது இடத்தில் உள்ளார். கடந்த வருடம் இவர் 58வது இடத்தில் இருந்தார்.இவரது சொத்து மதிப்பு 9.3 பில்லியன் டாலர்கள். ஆதித்ய பிர்லா, 149வது இடத்தில் உள்ளார். கடந்த முறை147வது இடத்தில் இருந்த இவரது சொத்து மதிப்பு 3.7 பில்லியன் டாலர்கள்.
இது தவிர இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்களான சுனில் மிட்டல் 164வது இடத்திலும், பலோன்ஜி மிஸ்ட்ரி170வது இடத்திலும், கோத்ரெஜ் குரூப் தலைவர் ஆதி கோத்ரெஜ் 355வது இடத்தையும் பிடித்து உலகின் பெரும்பணக்காரர்களாகத் திகழ்கின்றனர்.