For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெ. ஆஜராவாரா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன், சுதாகரன் ஆகியோர் வருமானத்தை மீறி சொத்துக் குவித்த வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நாளை (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

ஆனால், சட்டசபைக் கூட்டம் நடந்து கொண்டுள்ள நிலையில், நாளை காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது முதல்வர் பேசவேண்டியுள்ள சூழலில், ஜெயலலிதாநநிாளை பெங்களூர் செல்வாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.

ஜெயலலிதா, உடன் பிறவா சகோதரி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன், தினகரன் ஆகியோர் ரூ. 66கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை தனி நீதிமன்றத்திலிருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டது. பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்குநாளை விசாரணைக்கு வருகிறது. நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தனி நீதிமன்றம் ஏற்கனவேநோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விசாரணைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. ஜெயலலிதா வந்தால் அவருக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்கான அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்திற்கு வருவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக சட்டசபையில்பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து ஜெயலலிதாநாளை பேசவுள்ளார்.

இதனால் அவர் பெங்களூர் செல்வாரா அல்லது தன்னால் ஆஜராக முடியவில்லை என்று வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்வாராஎன்பது உறுதியாகத் தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X