திருவண்ணாமலை கோயில் சிலைகள் ஆட்டம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயில் சிலைகள் ஆட்டம் கண்டுள்ளதால், அதை சரி செய்ய ரூ. 1 லட்சம்செலவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது.
அண்ணாமலையார் கோயில் மூலஸ்தானத்தில் உள்ள அண்ணாமலையார் சிலையும், உண்ணாமலையம்மன் சன்னதியில் உள்ள சிலையும்ஆட்டம் கண்டுள்ளதாக கோயில் குருக்கள் தேவஸ்தானத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு இங்கு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது மூலஸ்தான சிலைகளின் பீடத்தைத் தரையுடன் சேர்க்க,அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 8 வகையான மருந்துகளை இடித்து, பீடத்திலும், தரையிலும் சாத்தும்போதுதரையுடன், பீடம் இணைக்கப்படும்.
அப்போது தவறான விகிதத்தில் மருந்து சாத்தப்பட்டதால் சிலைகளின் பீடத்துக்கும், தரைக்கும் இடையே இடைவெளி எழுந்து அதனால்சிலைகள் ஆட்டம் கண்டிருக்கலாம் என்று கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்போது இதை சரி செய்ய ரூ 1 லட்சம் செலவில் மஹாஸ்நபனாபிஷேகம் நடத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாக துணை ஆணையர்ஜெயராமன் கூறியுள்ளார். வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை இந்த அபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு அபிஷேகத்தால் பக்தர்கள் தரிசனம் பாதிக்கப்படாது. அனுபவமிக்கவர்களைக் கொண்டு ஆகம விதிப்படி தக்க ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாக ஜெயராமன் தெரிவித்துள்ளார்.