For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒருநாள் போட்டி: கொச்சி வருகிறார் முஷாரப்

By Staff
Google Oneindia Tamil News

கொச்சி:

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியைக் காணபாகிஸ்தான் அதிபர் முஷாரப் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று டெஸ்ட் மற்றும் 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது.மொகாலியில் கடந்த 8ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றிமுடிவடைந்துள்ளது.

2வது டெஸ்ட் போட்டி 16ம் தேதி கொல்கத்தாவிலும், 3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பெங்களூரிலும்தொடங்குகிறது.

இதன்பிறகு ஒரு நாள் போட்டிகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 2ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் முதல் ஒரு நாள்போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று கிரிக்கெட் போட்டியைக் காண இந்தியா வரபாகிஸ்தான் அதிபர் முஷாரப் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர், கொச்சியில் நடைபெறவுள்ள முதல் ஒரு நாள்போட்டியைக் காணவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று கொச்சியிலுள்ள கலூர் ஜவகர்லால் நேருஸ்டேடியத்திற்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆய்வு நடத்திவிட்டுச் சென்றனர்.

இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் எஸ்.கே. நாயர் கொச்சியில் இன்று உறுதிப்படுத்தினார். அவர்கூறுகையில், மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று கொச்சி ஸ்டேடியத்திற்கு வந்து பார்வையிட்டுச்சென்றுள்ளனர்.

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் வருவது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்காக அவர்கள்வந்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X