சுனாமி நிவாரணம்: உச்ச நீதிமன்ற குழு நாளை விசாரணை
நாகப்பட்டனம்:
தமிழகத்தில் சுனாமி நிவாரணப் பணிகள் முறையாக நடந்து வருகின்றனவா என்பதைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள குழு நாளை நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தவுள்ளது.
தமிழகத்திலும், புதுவையிலும் சுனாமி நிவாரணப் பணிகள் முறையாக நடக்கவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பொது நலமனு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சக்சேனா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தலைமையிலான ஒருகுழுவை நியமித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் சுனாமி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறுஇக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சக்சேனா தலைமையிலான குழு நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகிறது. நாகை, சென்னையில் நாளை ஆய்வு நடத்தும்இக் குழு 19ம் தேதி காஞ்சிபுரம், கடலூர் பகுதிகளில் ஆய்வு நடத்துகிறது.
21ம் தேதி சென்னையில் மாநில அளவில் விசாரணை நடத்துகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் இக் குழுஅறிக்கை தாக்கல் செய்யும்.