கோவில்களை புறக்கணிக்கும் தமிழக அரசு: பாஜக பாய்ச்சல்
நாகர்கோவில்:
தமிழகத்தில் இந்துக் கோவில்கழை தமிழக அரசு புறக்கணித்து வருவதாக என பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
நாகர்கோவிலில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் இந்து சமுதாயப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ராஜாபேசுகையில், தமிழகத்தில் உள்ள கோவில் வருமானத்திலிருந்து, மதக் காரியங்களுக்காக அரசு கொடுக்கும் தொகை ரூ. 1.92கோடி மட்டும் தான்.
ஆனால் அதிகாரிகளுக்கு ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ. 23.87 கோடியை அரசு எடுத்துக் கொள்கிறது.
2004ம் ஆண்டில் ரூ. 44 கோடியில் பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. இதில் அரசு மானியம்வெறும் ரூ. 75 லட்சம்தான். மற்ற பணத்தை கோவில் வருவாயிலிருந்தே எடுத்து செலவிட்டுள்ளனர்.
இந்துக் கோவில்களை இந்துக்களிடமே அரசு கொடுத்து விட்டு வெளியேற வேண்டும். அப்போதுதான் இந்துக் கோவில்களைசிறப்பாக பராமரிக்க முடியும்.
மதுரையில் 200க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களை, ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் இடித்துத்தள்ளியுள்ளனர். முதலில் அந்தக் கோவில்களை கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராஜா.