For Daily Alerts
Just In
ஜெயேந்திரரின் கோவில் விசிட்!
கலவை:
கலவை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பழமையான கோவில்களுக்கு ஜெயேந்திரர் சென்று வழிபட்டார்.
கலவை மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரர் தான் நிரந்தரமாக அங்கேயே தங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மேலும், கலவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களை புணரமைக்கவும், புதிய கோவில்களைக் கட்டவும்திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், கலவையில் உள்ள விநாயகர் கோவில், அய்யப்பன் கோவில், வீரபத்ரசாமி கோவில், அங்காள பரமேஸ்வரிகோவில், அங்கயற்கண்ணி கோவில், ராமர் கோவில், சந்திரசேகரேஸ்வரர் கோவில் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு நேரில்சென்று ஜெயேந்திரர் வழிபட்டார்.
கலவை மடத்திற்கு வந்த பின் இப்போது தான் முதல்முறையாக கலவை கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு ஜெயேந்திரர்செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, March 20, 2005, 5:30 [IST]