இந்தியாவிலேயே.. விஜய்காந்த் பாணியில் பொன்னையன் புள்ளிவிவரம்
சென்னை:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள் என நிதியமைச்சர்பொன்னையன் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து இன்றுபொன்னையன் பேசுகையில் ரமணா பட விஜய்காந்த் மாதிரி புள்ளி விவரம் மூலம் கலக்கினார். அவர் கூறுகையில்
ஆந்திராவில் 7.5 கோடி மக்கள் உள்ளனர். அங்கு அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 1.75 சதவீதம் ஆகும்.கர்நாடகத்தில் 5 கோடி பேர் உள்ளனர். இதில் அரசு ஊழியர்கள் விகிதம் 1.36 சதவீதமாகும்.
ஒரிஸ்ஸாவில் 3.5 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் 1.87 சதவீதம் பேர் அரசு ஊழியர்கள். குஜராத்தில் 4.75கோடி பேர் உள்ளனர். இவர்களில் 1.69 சதவீதம் பேர் தான் அரசு ஊழியர்கள்.
ஆனால், தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6.5 கோடியாகும். இவர்களில் 2.13 சதவீதம் பேர் அரசு ஊழியர்கள்ஆவர். அதாவது இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு ஊழியர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான்.
இத்தனை ஊழியர்கள் இருந்தும், முதல்வரின் சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக தொய்வின்றி அரசுப் பணிகள்நடந்து வருகின்றன. நிர்வாகத்துறையில் நிதி வருவாய் பெருக்கம் அதிகரித்திருக்கிறது.
ரேசன் கடைகள் மூலமான பொது வினியோகம், பள்ளிக் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.குடிநீர் வினியோகம், சாலைப் பராமரிப்பில் 2வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்க புரட்சித் தலைவி அவர்கள்சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றார் நிதியமைச்சர் பொன்னையன்.