For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழில் ஆய்வு செய்தால் தமிழ் இணைய பல்கலை ரூ. 5 லட்சம் உதவி

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

தமிழில் திட்ட ஆய்வு (புராஜெக்ட்) செய்ய முன் வரும் மாணவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்இணையப் தள பல்கலைக்கழக இயக்குனர் பேராசிரியர் வி.சங்கரநாராயணன் கூறியுள்ளார்.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழாவில் சங்கரநாராயணன் கலந்து கொண்டு பேசுகையில்,

பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள், தங்களது இறுதியாண்டு படிப்பின்போது, தமிழ் சம்பந்தமாக புராஜக்ட் செய்தால்,அவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை தமிழ் இணைய பல்கலைக்கழகம் மூலம் உதவி அளிக்கப்படும்.

20 சதவீத தமிழர்கள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள் தமிழில் பேசிக் கொண்டாலும், அவர்களதுகுழந்தைகளால் தமிழை சரளமாக எழுதவும், படிக்கவும் முடியவில்லை. அதற்கான சூழலும் அங்கு இல்லை.

அப்படிப்பட்டவர்களின் குறையைப் போக்க, இந்த இணைய தளப் பல்கலைக்கழகம் பெரும் உதவியாக உள்ளது.

75,000 டாலர் செலவில் தமிழ் பட்டதாரிகளை உருவாக்க இணைய தள பல்க்லைக்கழகம் உதவி வருகிறது. இதனால் தமிழ்ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பெரும் உதவியாக உள்ளது என்றார்அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X