ஜெயேந்திரரை கைது செய்தவருக்கு பதவி உயர்வு
சென்னை:
ஜெயேந்திரரை கைது செய்த கூடுதல் எஸ்.பி.சக்திவேலுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள சில போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்புகூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றி வந்த ஜார்ஜ் தேவசகாயத்துக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு சேலம் நகர துணைகமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி. மாசிலாமணிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு கோவை நகர துணை கமிஷனராகநியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் எஸ்.பி. சக்திவேலுக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வுவழங்கப்பட்டு சென்னையில் அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதே போல திருச்சி நகர குற்றப் பிரிவு கூடுதல் எஸ்.பி.நடராஜன், மதுரை அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.