For Daily Alerts
Just In
பால் தாக்கரே உதவியாளர் கைது
மும்பை:
கார் விபத்து தொடர்பாக பால் தாக்கரேவின் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேவின் உதவியாளர் ரவீந்திர மத்ரே. இவர் இன்று காலை தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 2 பேர் பரிதாபமாகஇறந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக ரவீந்திர மத்ரேவை போலீஸார் கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Comments
Story first published: Sunday, March 27, 2005, 5:30 [IST]