பஹ்ரைனில் இந்திய தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை: ஊழியர்கள் வன்முறை போராட்டம்
துபாய்:
பஹ்ரைனில் இந்தியத் தொழிலாளி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து விசாரணை நடத்தக் கோரி 400 இந்தியத் தொழிலாளர்கள் வன்முறைப் போராட்டத்தில் இறங்கினர்.
பஹ்ரைனில் ஒரு ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வந்தார் ஆந்திர மாநிலம் திருப்பதியைச்சேர்ந்த மது பாபு (25). எட்டு மாதங்களுக்கு முன் இவர் பணியில் சேர்ந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜே.சி. பென்னி ஜவுளி நிறுவனத்துக்கு உடைகளைத் தயாரித்து வருகிறது இந்த ரெடிமேட் ஆலை.
இந்த ஆலையில் தொழிலாளர்களுக்கு மிகுந்த வேலைப்பளு தரப்பட்டு வருவதாகத் தெரிகிறது. சமீபத்தில் 16தொழிலாளர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் தரப்பட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த இரு வாரங்களாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்த மது, நோயுடன் பணியாற்றநிர்பந்திக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் கடந்த சனிக்கிழமை ஆலையின் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு அறையின் சீலிங்கில் இருந்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் மது. அவரது தற்கொலைக்கு அந்த ரெடிமேட் ஆலையில் தரப்பட்ட பணி ரீதிலியான தொல்லையே காரணம்என்று தெரிகிறது.
பணியில் மிகவும் துன்புறுத்தப்பட்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்தக்கோரியும் சுமார் 400 தொழிலாளர்கள், பெரும்பாலும் இந்தியர்கள், போராட்டத்தில் குதித்தனர்.
ரெடிமேட் ஆலையின் ஒரு பகுதியை அவர்கள் அடித்து நொறுக்கினர். ஆலையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களையும்உடைத்தனர்.
இதையடுத்து அந்த ஆலை தாற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.
மதுவின் சாவு விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு பஹ்ரைன் தொழிலாளர்துறை அமைச்சர் மஜீத் அல்-அல்லாவிக்குபஹ்ரைன் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிடுமாறு ரெடிமேட் ஆலையின் ஊழியர்கள் இந்திய மற்றும் வங்கதேச தூதரங்களிடம் கோரிக்கைக்கடிதங்களை வழங்கியுள்ளனர்.
இந்த சாவு விவகாரத்தை குடிபெயர்ந்த தொழிலாளர் நலக் கமிட்டியும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது.