For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். சிறுமிகள் வழங்கிய சுனாமி நிவாரண நிதி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி சிறுமிகள் சுனாமி நிவாரண நிதியாக ரூ.45,000ஐ பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இன்றுவழங்கினார்கள். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் ஷூ-பாலிஷ் செய்தும், பேக்கரி பொருட்களை விற்பனை செய்தும் இந்தப்பணத்தை சேகரித்துள்ளனர்.

இந்தியாவில் சுனாமியால் பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து அவதிப்படுவது குறித்து கேள்விப்பட்டபாகிஸ்தானிலுள்ள லாகூரை சேர்ந்த 16 பள்ளி சிறுமிகள், அவர்களுக்கு உதவி செய்யத் தீர்மானித்தனர்.

ஷூ-பாலிஷ் போடுவது, வீட்டில் செய்த பேக்கரிப் பொருட்களை விற்பனை செய்வது என இவர்கள் பணத்தை திரட்டத்தொடங்கினர். இவ்வாறு கிடைத்த பணம் 45,000 ரூபாயை அவர்கள் அனைவரும் சேர்ந்து இந்தியப் பிரதமரிடம் ஒப்படைக்கமுடிவு செய்தனர்.

இதற்காக வாகா எல்லை வழியாக இந்தியா வந்த அவர்கள் அனைவரும் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து45,000 ரூபாய்க்கான செக்கை வழங்கினர்.

அவர்களை மன்மோகன் சிங் மனதார பாராட்டினார். பாகிஸ்தான் சிறுமிகளின் மனித நேயம் தன்னுடைய மனதை மிகவும்தொட்டுவிட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இதன் பிறகு பாகிஸ்தான் பள்ளிச் சிறுமிகள் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி, டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜா சிந்தியா மற்றும் உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரையும் சந்திக்கஉள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X