சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களை இணைக்க இலவச நிலம் தரும் மாநில அரசு
சென்னை:
சென்னை சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களை இணைக்க வசதியாக ரயில்வே துறைக்கு 7,300 சதுர அடி நிலத்தை மாநிலஅரசு இலவசமாக வழங்கவுள்ளது.
சட்டசபையில் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்துஅமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:
அரசுப் போக்குவரத்துக் கழங்கள் அம்மாவின் ஆட்சியில் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகின்றன.
சென்னை சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களை இணைக்க ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது. இதற்காக 7,300 சதுர அடிநிலத்தை மாநில அரசு இலவசமாக வழங்கவுள்ளது.
அதே போல தரமணியில் இருந்து மகாபலிபுரத்துக்கு பங்கிங்காம் கால்வாய் வழியாக பறக்கும் ரயில் விட வேண்டும் எனரயில்வே துறையிடம் தமிழக அரசு கோரியுள்ளது. இத் திட்டத்துக்குத் தேவையான நிலத்தை இலவசமாகத் தர மாநில அரசு தயார்.
மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல தஞ்சாவூரில் புதியவிமான நிலையம் அமைக்கவும் மத்திய அரசை மாநில அரசு அணுகியுள்ளது.
பஸ்களை தனியார்மயமாக்குவது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்புக்குப் பின் உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார் விஸ்வநாதன்.
போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.