போப்புக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை
ரோம்:
உடல் நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். அவருக்குதொண்டையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே போப் ஆண்டவர் மூச்சுத் திணறல் உட்பட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். இதனால்கடந்த மாதம் ரோமிலுள்ள ஜெர்மிலி மருத்துவமனையில் அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்தது.
அவரது தொண்டையிலிருந்து நுரையீரலுக்கு ஒரு குழாய் பொருத்தப்பட்டது. இதனால் அவருக்கு மூச்சுத் திணறல் குறைந்தது.
இதன் பிறகு மருத்துவமனையில் இருந்து வாடிகன் நகருக்கு திரும்பிய போதிலும் போப்பின் உடல் நிலையில் குறிப்பிடத்தக்கமுன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் அவர் ஈஸ்டர் பிரார்த்தனையிலும் கலந்து கொள்ளவில்லை.
போப் ஆண்டவரால் இப்போது திரவ உணவை கூட சரியாக சாப்பிட முடியவில்லை. இதனால் அவர் சோர்வடைந்த நிலையில்காணப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போப் ஆண்டவருக்கு மீண்டும் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் தீர்மானித்துள்ளனர்.