For Daily Alerts
Just In
700 கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு விஆர்எஸ்
சென்னை:
தமிழக அரசின் கோ ஆப்டெக்ஸ் நிறுவன கடைகளில் பணியாற்றும் 700 பேருக்கு விருப்ப ஓய்வு கொடுக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் சோமசுந்தரம் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் கைத்தறித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து அமைச்சர் சோமசுந்தரம் பேசுகையில்,கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கடைகளில் 1,721 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 700 பேருக்குவிருப்ப ஓய்வு கொடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் இனிமேல் செட்டி நாடு, காஞ்சி காட்டன், சுங்குடி ரக சேலைகளையும் விற்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Comments
Story first published: Wednesday, March 30, 2005, 5:30 [IST]