For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு நினைவூட்டும் ஜெயந்தி !

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய அரசு விரைவாக செயல்படவில்லை என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில்,

சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு போதுமான நிவாரண உதவிகளை,விரைவாக செய்தது. நிலைமை இப்படி இருக்க முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசு மீது புகார் கூறுவது தவறானது.

நிவாரண உதவிகளை வழங்குவதிலும், கடன் தொகையை வழங்குவதிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் மத்திய அரசுவிரைவாக செயல்பட்டது.

தமிழக அரசின் தேவைகளை மத்திய அரசு பூர்த்தி செய்துள்ளதாக ஜெயலலிதாவே பாராட்டியுள்ளதை அவருக்கு நினைவூட்டவிரும்புகிறேன் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X