For Daily Alerts
Just In
விஜயகாந்த்தால் பாதிப்பு இல்லை: வைகோ
சென்னை:
நடிகர் விஜயகாந்த் ஆரம்பித்துள்ள புதிய கட்சியால் மதிமுகவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
அண்ணா பிறந்தநாளையொட்டி கட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலையைத் திறந்து வைத்து மாலை அணிவித்துமரியாதை செய்த பின்னர் வைகோ பேசுகையில், கட்சி தொடங்குவதற்கும், அரசியலில் ஈடுபடுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு.அந்த அடிப்படையில்தான் விஜயகாந்த் கட்சி தொடங்கியுள்ளார்.ஊழலை ஒழிப்பேன் என்று அவர் கூறியிருப்பது அவரது கருத்தாகும். அவ்வாறு பேச அவருக்கு உரிமை உள்ளது. அவரது கட்சியால்தமிழகத்தில் திமுக கூட்டணிக்கோ அல்லது மதிமுகவுக்கோ ஒரு பாதிப்பும் ஏற்படாது. எங்களது கூட்டணி எஃகு கூட்டணி. வரும் சட்டசபைத்தேர்தலிலும் நாங்கள் இணைந்தே போட்டியிடுவோம்.
தமிழகத்தைப் பொருத்தவரை எந்தவிதமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டாலும் அது திமுக கூட்டணிக்கு ஒரு பாதகத்தையும் தராது என்றார்வைகோ.
Comments
Story first published: Friday, September 16, 2005, 5:30 [IST]