For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துணை மேயர் காரத்தே தியாகராஜன் கைதாகிறார்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சியின் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Karate Thyagarajan&Jayalalitha
முதல்வர் ஜெயலலிதாவுடன் கராத்தே மற்றும் மாநகராட்சி ஆணையர் விஜய்குமார்

விளம்பர போர்டுகள் வைக்க கமிஷன் வாங்கிக் கொண்டு அனுமதி தந்தது, வெளிநாட்டுப் பொருட்கள் கடத்தல் கும்பல்களுடன்நெருக்கமாக இருப்பது ஆகிய புகார்களின் அடிப்படையில் அவர் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.

சில காலம் வரை முதல்வர் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் நெருக்கமானவராகக் கருதப்பட்டு வந்த கராத்தே மீதுசமீபகாலமாக போயஸ் தோட்டம் அதிருப்தியில் இருந்து வருகிறது.

சமீபத்தில் மாநகராட்சிப் பூங்காக்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தபோது அந்த விழாக்களுக்கு கராத்தேஅழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கராத்தேவை பதவி நீக்கம் செய்யலாம் என்றால், சட்டச் சிக்கல் காரணமாக அதிலும் பிரச்சனை உள்ளது.

அதே நேரத்தில் துணை மேயர் பதவிக்கு மறு தேர்தல் நடத்தினால், அந்தப் பதவியை அதிமுக மீண்டும் பெற பிடிக்க முடியுமாஎன்பதும் சந்தேகமாக உள்ளது. பல அதிமுக கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருப்பதால் அந்த ரிஸ்க்கை எடுக்க அதிமுக தரப்புவிரும்பவில்லை.

இதனால் கராத்தேவை ஏதாவது வழக்கில் உள்ளே தள்ள சில மாதங்களுக்கு முன்பே நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டதாகபேசப்பட்டு வந்தது. அவர் மீது நடந்த விசாரணையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தான் அவரை உள்ளே போட முடியும் என்றுதெரியவந்ததாம்.

ஆனால், இது கட்சிக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கைது திட்டம் தள்ளிப் போடப்பட்டிருந்தது.

இந் நிலையில் கராத்தேவை உள்ளே அனுப்ப சரியான காரணம் கிடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை நகரில் விளமபரபோர்டுகள் வைக்க அனுமதி அளித்ததில் கராத்தே பெரும் பண முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கராத்தேவை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாககாவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கராத்தேவுக்கும் மாநகராட்சி ஆணையர் விஜய்குமாருக்கும் இடையே பனிப் போர் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. கராத்தேசெய்யும் அடாவடித்தனங்களை போயஸ் கார்டனுக்கு விஜய்குமார் அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

சமீபத்தில் சைதாப்பேட்டையில் மாநகராட்சி நிலத்தை விற்றதில் கராத்தே பெரும் அளவில் கமிஷன் அடித்தாகவும் ஒருஅமைச்சரே புகார் அனுப்பினாராம்.

இதற்கிடையே தன்னைக் கைது செய்தால், விஜய்காந்த் கட்சிக்குத் தாவி விட காராத்தே திட்டமிட்டுள்ளதாக அவரதுஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந் நிலையில் கராத்தே தியாகராஜன் இப்போது சென்னையில் இல்லை என்கிறார்கள். அவர் திரும்பி வந்தவுடன் கைது படலம்அரங்கறேலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X