மார்ச் 30ல் சிபிஎம், ஏப் 6ல் சிபிஐ பட்டியல்
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 30ம் தேதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏப்ரல் 6ம்தேதியும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிடுகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 9 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
மற்ற குட்டிக் கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகள் தரப்பட்டுள்ளன. அதிமுககூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐ.என்.டி.யூ.சி. அமைப்பும், இந்திய யூனியன் ஸ்லீம்லீக் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
பெரிய கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வருகின்றன.இதில் திமுகவும், அதிமுகவும் நாளை பட்டியலை வெளியிடக் கூடும் எனத்தெரிகிறது.
இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கூட்டம் வருகிற 29ம் தேதிசென்னையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலுக்கு மாநிலக் குழுவின் ஒப்புதல் பெறப்படுகிறது.இதையடுத்து 30ம் தேதி வேட்பாளர் பட்டியலை கட்சியின் மாநிலச் செயலாளர்வரதராஜன் வெளியிடுகிறார்.
இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் தலைமையில், ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் பட்டியலை பாண்டியன் வெளியிடுகிறார். இரு கட்சிகளின்தேர்தல் அறிக்கைகளும் வேட்பாளர் பட்டியலைத் தொடர்ந்து வெளியாகவுள்ளது.