சென்னை ரஜினி ரசிகர்கள் திமுகவுக்கு ஆதரவு!
சென்னை:
திமுக கூட்டணிக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம் என தென் சென்னைமாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது.
அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் திரும்புகிறார்கள் என்ற மாயத் தோற்றத்தைஏற்படுத்த சிலர் முயலகிறார்கள். இதை முறியடிக்கும் வகையில் ரஜினிகாந்த்தின்மெளனம் விரைவில் கலையும். இல்லாவிட்டால் திமுக கூட்டணிக்கு ஆதரவாகநாங்கள் செயல்படுவோம் என்று தென் சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றதலைவர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.இதனால் ரஜினி ரசிகர்கள் அதிமுக, திமுக என இரண்டாகப் பிரியும் நிலைஉருவாகியுள்ளது.
இதுதொடர்பாக பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விஜயகாந்த்துக்குத் தூது விட்டுத் தோற்றுப் போன அதிமுக, இப்போது ரஜினிரசிகர்கள் எல்லாம் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது போன்ற மாயத் தோற்றத்தைஏற்படுத்தும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளது.
அதிமுக ஆசியுடன், இதற்காக பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் காரைக்குடிராமசாமி அம்பலம் என்பவர் காரைக்குடி ரஜினி ரசிகர்களை வைத்து புதிய கட்சிஒன்றை தொடங்கி இருக்கிறார்களாம்.
இந்தக் கேலிக் கூத்தை ரஜினி ரசிகர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கடந்தநாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னை அண்ணா நகரில் ரஜினி படத்துடன்விளம்பரம் வைத்ததற்காக அந்தப் பகுதி அதிமுக வட்டச் செயலாளர் ஜனார்த்தன்கட்சியை விட்டே நீக்கப்பட்டார்.
இன்றைக்கு ரஜினி ரசிகர்களை அதிமுக அழைத்துப் பேசுகிறது என்றால், அந்தநயவஞ்சகத்தை ரஜினி ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி மன்ற அமைப்புகளை சீர்குலைக்கும் சதி வேலைகள்தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த உண்மைகளை எல்லாம் அறிந்த ரஜினி விரைவில் தனது மெளனத்தைகலைப்பார் என்று நம்புகிறோம். இல்லாவிட்டால் வருகிற சனிக்கிழமை சென்னைமாவட்ட ரஜினி ரசிகர் மன்ற கூட்டத்தைக் கூட்டி ஜெயலலிதாவுக்கு எதிரான நிலையைஎடுப்போம்.
வரும் தேர்தலில் அதிமுகவுக்கு எதிரான திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யமுடிவு செய்து அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று பாஸ்கர்கூறியுள்ளார்.