திமுக சார்பில் மதுரையில் ஜெயலட்சுமி போட்டி?
மதுரை:
திமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்புவழங்கப்பட்டுள்ளதா என்பதை வரும 31ம் தேதி தெரிவிப்பதாக ஜெயலட்சுமிகூறியுள்ளார்.
ஏட்டு முதல் எஸ்.பி. வரை தென் மாவட்ட காவல்துறையை தனது சேலைமுந்தானையில் சுற்றி வளைத்து தமிழகத்தையே பரபரப்பில் சுழல வைத்தவர்ஜெயலட்சுமி.திண்டுக்கல் டி.எஸ்.பி. ராஜசேகரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை, திண்டுக்கல், தாராபுரம், கோவை என பல ஊர்களில் ஜெயலட்சுமி மீதுவழக்குகள் நிலுவையில் உள்ளன. இந் நிலையில் தனக்கு திமுக சார்பில் போட்டியிடசீட் கேட்டு கருணாநிதிக்கு ஜெயலட்சுமி கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் அதுகுறித்து திமுக தரப்பில் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்தப் பின்னணியில் இன்று வழக்குக்காக மதுரை நீதிமன்றத்திற்கு ஜெயலட்சுமிகொண்டு வரப்பட்டிருந்தார். விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்த ஜெயலட்சுமிசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு திமுக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன்.எனக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதா, நான் தேர்தலில் போட்டியிடுகிறேனா, எந்தத்தொகுதியில் போட்டியிடுகிறேன் என்ற கேள்விகளுக்கெல்லாம் வரும் 31ம் தேதிமீண்டும் நீதிமன்றத்திற்கு வரும்போது பதிலளிக்கிறேன் என்று சூசகமாக தெரிவித்துவிட்டுச் சென்றார் ஜெயலட்சுமி.
அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல் என பல்வேறு வழக்குகளை சுமந்து வந்தவெங்கடேஷ் பண்ணையார் போலீஸாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, நாடார்சமுதாயத்தினரின் ஒட்டு மொத்த வாக்குகளையும் அள்ளும் விதத்தில், அதுவரையாருமே அறிந்திருந்த பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியை அவசரமாகதிமுகவில் உறுப்பினராக சேர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தியது திமுக.
அது போல காவல்துறையை கலங்கடித்த ஜெயலட்சுமிக்கும் திமுகவில் சீட்தரப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜெயலட்சுமி உண்மையைச் சொல்கிறாரா அல்லது பிட்டை போடுகிறாரா என்பதுதிமுக வேட்பாளர் பட்டியல் வெளி வந்தால் தான் தெரியும்.