அதிமுகவுக்கு ஆதரவு: பு.தா. இளங்கோவன்
சிதம்பரம்:
அதிமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் கொடுக்காவிட்டாலும் கூட, பாமகவைத்தோற்கடிக்க தீவிரமாக பாடுபடுவோம் என்று பாட்டாளி முன்னேற்றக் கழகம்கட்சியின் தலைவரான பு.தா.இளங்கோவன் கூறியுள்ளார்.
பாமக முன்னணித் தலைவர்களில் ஒருவரான பு.தா. இளங்கோவன் சமீபத்தில்பாட்டாளி முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த இளங்கோவன், ஜெயலலிதாவையும்சந்தித்துப் பேசினார். இதனால் அவருக்கு தேர்தலில் சீட் கிடைக்கும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு சீட் தரப்படவில்லை.
இதனால் பு.தா.இளங்கோவன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விஎழுந்தது. ஆனால் தனது அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லைஎன்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதாவைசந்தித்துப் பேசியபோது அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிடுமாறுவேண்டுகோள் விடுத்தார். அதை நான் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக்கொண்டேன்.
மேலும் கட்சி தொடங்கி சிறிது காலமே ஆவதாலும், தேர்தலுக்கு குறுகிய காலஅவகாசம இருந்ததாலும் சீட் கேட்கவில்லை. முதல்வர் ஜெயலலிதா தலைமையில்தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம்.
திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும், குறிப்பாக பாமக போட்டியிடும்தொகுதிகளில் அக்கட்சியைத் தோற்கடிக்க தீவிரமாக உழைப்போம்.
டாக்டர் ராமதாஸின் 25 ஆண்டு கால முரண்பாடான அரசியல், நம்பிக்கை துரோகம்,கட்சிக்காக உழைத்தவர்களை குடும்ப நலனுக்காக புறக்கணித்தது ஆகியவற்றைமக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்போம். பாமகவைத் தோற்கடிப்பதேஎங்களது லட்சியமாகும்.
தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றமுடிவு செய்துள்ளோம் என்றார்.