பாஜக அணியில் கார்த்திக்-திருநாவுக்கரசர் முயற்சி
சென்னை:
கார்த்திக்கை பாஜக கூட்டணியில் இழுக்கும் வேலையில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்ஈடுபட்டுள்ளார்.
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர் மூலம் அதே சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக்கை கூட்டணிக்குள்கொண்டு வரும் வேலையில் பாஜக மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதே போல தனியே போட்டியிடுவேன்என்று கூறி 140 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்ட விஜய்காந்தையும் கூட்டணிக்குள்கொண்டு வர பாஜக முயற்சித்து வருகிறது.விஜய்காந்த்-கார்த்திக் இடையே கூட்டணி ஏற்படுத்தவும் ஒரு பக்கம் விடாமல் முயற்சி நடந்தாலும் அதில் பெரியஅளவில் பலன் கிடைக்கவில்லை. இந் நிலையில் விஜய்காந்த்-கார்த்திக் ஆகியோரை தனது குடையின் கீழ்கொண்டு வர பாஜக முயற்சித்து வருகிறது.
இதற்கிடையே முக்குலத்தோர் கட்சி என்று கூறப்படும் கார்த்திக் தலைமையிலானா பார்வர்டு பிளாக்கட்சியில் பேரூர், திண்டுக்கல், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் சிறுபான்மையினரைநிறுத்தியுள்ளார் கார்த்திக்.
111 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள கார்த்திக் முதலில் 15வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். பின்னர் மேலும் 30வேட்பாளர்கள் அடங்கிய 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதில் பேரூர் தொகுதியியில் நூர்முகமது, திண்டுக்கல் தொகுதியில் முகமதுசித்திக்கும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரடெரிக் ஸ்டேன்லியும் வேட்பாளராகநிறுத்தப்பட்டுள்ளனர்.