ஆனந்தராஜைக் காக்க வந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள்!
பாண்டிச்சேரி:
நடிகர் ஆனந்தராஜ் மீது தாக்குதல் நடந்து விடாமல் பாதுகாப்பதற்காக காரில்ஆயுதங்களுடன் புதுவைக்கு சென்ற சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்களை போலீஸார்தடுத்து நிறுத்தி கார் மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
நடிகர் ஆனந்தராஜ் புதுவை மாநிலம் உருளையன்பேட்டை தொகுதியில்போட்டியிடுகிறார். ஏற்கனவே இத்தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தநேருவின் ஆதரவாளர்கள் இதனால் கொதிப்படைந்துள்ளனர். ஆனந்தராஜுக்குஎதிராக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று புதுவையில் பிரசாரம் மேற்கொண்டார்.ஆனந்தராஜ் போட்டியிடும் உருளையன்பேட்டை தொகுதியிலும் அவர் வேனில்இருந்தபடி பிரசாரம் செய்தார்.
இந்தச் சூழ்நலையில், சென்னயிலிருந்து பாண்டிச்சேரிக்கு 2 கார்களில் வந்த சிலரைபோலீஸார் சந்தேகத்தின்பேரில் மடக்கி விசாரணை மேற்கொண்டனர். அப்போதுஅவர்கள் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள் எனவும், ஆனந்தராஜுக்கு பாதுகாப்பாகஇருப்பதற்காக புதுவை வந்ததாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் வந்த காரில் முறையான ஆவணங்கள் இல்லை. மேலும் காரில்ஆயுதங்களும் இருந்தன. இதனால் காரையும், ஆயுதங்களையும் போலீஸார் பறிதல்செய்தனர்.