For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்க்கட்சிகளின் திணறல்: ஜெ. "அட்டாக்!

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

எதைச் சொல்லி வாக்கு கேட்பது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் திணறிவருகின்றன, திகைத்து நிற்கின்றன என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்துப் முதலவர் ஜெயலலிதாபிரசாரம் செய்தபோது, வாக்குறுதியை நிறைவேற்றும் உறுதிப்பாடு எதிர்க்கட்சிகளிடம்இல்லை.

சொல்லுக்கும், செயலுக்கும் என்னிடம் இடைவெளியே கிடையாது. ஆனால்எதிர்க்கட்சிகளிடம் இந்த இரண்டுக்கும் சம்பந்தமே கிடையாது.

எதைச் சொல்லி வாக்கு கேட்பது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் திணறுகின்றன,திகைத்து நிற்கின்றன. ஆனால் நாங்களோ எந்தச் சாதனையைச் சொல்வது, எதைவிடுவது என்று தெரியாமல் நிற்கிறோம். 2001ல் அபரிதமான ஆதரவைத் தந்தீர்கள். அன்று நீங்கள் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. அதேபோன்ற ஆதரவை இப்போதும் தருவீர்கள் என நம்புகிறேன்என்றார் ஜெயலலிதா.

தொடர்ந்து கண்டமங்களம், வானூர் கோட்டகுப்பம் பகுதிகளிலும் ஜெயலலிதாபிரசாரம் செய்தார். பின்னர் புதுவை மாநிலம் மதகடிப்பட்டு என்ற இடத்தில்ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.

அங்கிருந்து ரெட்டியார்பாளையம், காசுக்கடை, மண்ணடிப்பட்டு, லாஸ்பேட்டை,உருளையன்பேட்டை, ஏம்பலம், பாகூர், உப்பளம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம்செய்தார். தனது பிரசாரத்தின்போது, காங்கிரஸ், திமுக ஆட்சிகளில் புதுவை மாநிலம்சீரழிந்து போய் விட்டது. வேலையில்லா இளைஞர்கள் பெருகி விட்டனர்.

தமிழகத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு புதுவை மாநிலம்புகலிடமாக மாறி விட்டது. இந்த அவலத்திற்கு முடிவு கட்டவே அதிமுக, புதுச்சேரிமுன்னேற்ற காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஓரணியில் திரண்டுஉங்களை சந்திக்க வந்துள்ளன.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தருவோம். 30 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்திமுடிப்போம். தமிழகத்தைப் போல இங்கும் திருக்கோவில் அன்னதானத் திட்டம்,மசூதி, தேவாலயங்களில் அன்னதானத் திட்டததை அமல்படுத்துவோம்.

தீவிரவாதிகளையும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரையும் கிள்ளி எறியகுண்டர் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருவோம்.

சென்னையிலிருந்து புதுவைக்கு மினி கப்பல் போக்குவரத்தை அமல்படுத்துவோம்.அதி நவீன தொழில்நுட்பப் பூங்கா இங்கு ஏற்படுத்தப்படும். பாமகவின் ஜிப்மர்தன்னாட்சி முயற்சிகளை முறியடித்து தொழிலாளர்கள், நோயாளிகளின் நலன்காப்போம் என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் பெண்கள் அதிக அளவில்திரண்டு வந்திருந்தனர். வழியெங்கும் தாரை, தப்பட்டைகள் முழங்கஜெயலலிதாவுக்கு வரவேற்புகொடுக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X