17ம் தேதி கருணாநிதி வேட்பு மனு தாக்கல்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி ஏப்ரல் 17ம் தேதி சேப்பாக்கம் தொகுதியில்போட்டியிடுவதற்காக வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தை வருகிற 9ம் தேதி தொடங்குகிறார். தான்போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் முதல் மூன்று நாட்களுக்கு அவர் தீவிரப்பிரசாரம் மேற்கொள்கிறார்.அதைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் வருகிற 24ம் தேதி வரைபிரசாரம் செய்கிறார்.
தனது முதல் கட்ட பிரசாரத்தில், சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் 6 நாட்களுக்குகருணாநிதி பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். வரும் 17ம் தேதி காலை 10.30மணிக்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
கருணாநிதியின் சுற்றுப் பயணத்தையொட்டி கட்சியினருக்கு ஏராளமானகட்டுப்பாடுகளை திமுக விதித்துள்ளது. அதன்படி, கருணாநிதி வரும்சாலையோரங்களில் பேசும் பிரசாரங்களைத் தவிர வேறு கூட்டங்களுக்கு ஏற்பாடுசெய்யக் கூடாது.
தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்கவேண்டும். வான வேடிக்கைகள், துணடு, பொன்னாடை, மாலைகள் அணிவிப்பதைகண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
திமுக தொண்டர்கள் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், கார் போன்றவற்றில் தொற்றிக்கொண்டு ஊர்வலம் போல செல்லாமல் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை விரைவாக நடத்திமுடிக்க ஒத்துழைத்திட வேண்டும் என்று தலைமைக் கழக செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
INDIA NEWS |