தேர்தல் பிரசாரம்: பழ. நெடுமாறனுக்கு அனுமதி
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகபிரசாரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசியதாக கூறி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒருஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்தார் பழ. நெடுமாறன். பின்னர் அவரை சென்னை உயர்நீதிமன்றம்நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.இந் நிலையில் பழ. நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், வரும்சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளை ஆதரித்துத் தேர்தல் பிரசாரம் செய்ய தான் விரும்புவதாகவும், இதற்குவசதியாக தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஜாமீன் நபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,நெடுமாறனின் கோரிக்கையை ஏற்று அவரது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டது.
இருப்பினும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசவோ, பத்திரிக்கைகளுக்குப் பேட்டிஅளிக்கவோ கூடாது என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
நிபந்தனை தளர்த்தப்பட்டதையடுத்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
INDIA NEWS |