For Daily Alerts
Just In
மெளன விரதம் அனுஷ்டித்த வைகோ!
கரூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது தந்தை வையாபுரியின் நினைவுநாளையொட்டி புதன்கிழமை முழுவதும் மெளன விரதம் இருந்தார். இதனால் மாலை4.30 மணிக்கு மேல்தான் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
வைகோவின் தந்தை வையாபுரியின் நினைவு நாள் ஏப்ரல் 5ம் தேதியாகும். அன்றையதினம் அவர் யாருடனும் பேசாமல் மெளன விரதம் அனுஷ்டிப்பார். இந் நிலையில்நேற்று தந்தையின் நினைவு தினம் என்பதால், செவ்வாய்க்கிழமை இரவு பத்தேகால்மணி முதல் மாலை 4.30 மணி வரை வைகோ மெளனம் அனுஷ்டித்தார்.யாராவது தன்னிடம் ஏதாவது பேசினால், பதிலுக்கு காகிதத்தில் எழுதி பதிலளித்தார்.பின்னர் அரவக்குறிச்சிக்கு வந்த வைகோ மாலை நாலரை மணியளவில் மதிமுகவேட்பாளர் மொஞ்சனூர் ராமசாமியின் வீட்டில் தயிர் சாதம் சாப்பிட்டு தனது மெனளவிரதத்தை முடித்துக் கொண்டார். பின்னர் புத்துணர்வுடன் பிரசாரத்துக்குப்புறப்பட்டார்.
INDIA NEWS |
Story first published: Thursday, April 6, 2006, 5:30 [IST]