காங்கிரஸிலிருந்து வெளியேறினார் முக்தா சீனிவாசன்
சென்னை:
காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவரும், மறைந்த மூப்பனாரின் நண்பருமானதிரைப்படத் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் ராஜினாமா செய்துள்ளார்.
மூப்பனாரின் பள்ளித் தோழரான முக்தா, மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமிக்குஅனுப்பியுள்ள கடிதம்:காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்து வியப்பும், வேதனையும்அடைந்தேன். எந்தவொரு நியாயத்திற்கும், கட்டுப்படாத கட்சியாக இந்த ஸ்தாபனம்போய் விட்டதே என்ற வருத்தத்துடன் உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்.
எனது இக்கடிதத்தையே ராஜினாமா கடிதமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
கடந்த 43 ஆண்டுகளாக காமராஜர், மூப்பனார் போன்ற தலைவர்களுடன் ஆற்றியபணிகளின் நினைவுகள் எனக்கு மன நிறைவு தருகின்றன.
நீங்கள் அனைவரும் என் மீது காட்டிய பரிவுக்கு நன்றி என்று அதில் கூறியுள்ளார்.
இக்கடிதத்தின் நகலை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனுக்கும் க்தா அனுப்பிவைத்துள்ளார்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த முக்தா காங்கிரஸ் கட்சியில் எந்த கோஷ்டியிலும்சிக்காதவர். நேர்மைப் பேர் போன இவர் தனக்கு மயிலாடுதுறை அல்லதுபிராமணர்கள் அதிகம் வசிக்கும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புகிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், அவரை வாசன் கோஷ்டி ஓரங்கட்டிவிட்டது.
INDIA NEWS |