For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு படுதோல்வி: உளவுப் பிரிவு அறிக்கையால் ஜெ. அவதூறு- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று உளவுப் பிரிவுபோலீஸார் தெளிவாக கூறி விட்டதால் மக்களை திசை திருப்ப வன்முறை, தேர்தலைநிறுத்த சதி என்று அவதூறாக பேசத் தொடங்கியுள்ளார் ஜெயலலிதா என திமுகதலைவர் கருணாநிநதி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,

புதுவை தேர்தலிலும் கூட்டணியைத் தொடர்வது குறித்து காங்கிரஸுடன்பேசப்பட்டது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேசகாங்கிரஸ் முன் வந்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது திமுகவுக்கான தொகுதி உடன்பாடுமுடிவடைந்துள்ளது. மற்ற கட்சிகளுடனும் காங்கிரஸ் தொடர்ந்து பேச்சு நடத்திஉடன்பாடு காணும்.

வன்முறையைத் தூண்டி தேர்தலை நிறுத்த நானும், எனது கூட்டணிக் கட்சியினரும் சதிசெய்வதாக முதல்வர் கூறியுள்ளார். முதலமைச்சர் பதவி வகிக்கும் ஒருவர் பேசக்கூடிய பேச்சல்ல இது. தோல்வி பயம் எங்களுக்கு இல்லை, அவர்களுக்குத்தான்வந்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களுக்குக் குறையாமல்வெற்றி பெறும் என்று உளவுப் பிரிவு போலீஸார் ஜெயலலிதாவிடம் விரிவாக,விளக்கமாக எடுத்துரைத்துள்ளனர்.

எனவே தோல்வி பயத்தில் இருப்பவர் ஜெயலலிதாதன். இதனால்தான் அவர் மக்களைதிசை திருப்ப அவதூறை எங்கள் மீது திருப்பி விடுகிறார் என்றார் கருணாநிதி.

INDIA NEWS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X