பசுபதி மனைவி கொலை-வாலிபர் சரண்
நாகர்கோவில்:
தேவேந்திர குல வேளாளர் இளைஞர் பேரவைத் தலைவர் பசுபதி பாண்டியன் மனைவிஜெசிந்தா பாண்டியன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்ட வழக்கில் மோகன் என்றஇளைஞர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பசுபதிபாண்டியன், தனது மனைவி ஜெசிந்தா பாண்டியன்மற்றும் தனது ஆதரவாளர்களுடன் திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்குச்சென்றபோது எப்போதும் வென்றான் இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, வெடிகுண்டுத்தாக்குதலுக்கு ஆளாகினர். இதில் ஜெசிந்தா பாண்டியன் கொல்லப்பட்டார். மற்றவர்கள்காயமடைந்தனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தனிப்படைகள்அமைக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு வலை வீசப்பட்டுள்ளது. இந் நிலையில்,நாகர்கோவில் நீதிமன்றத்தில் மோகன் என்ற 27 வயது வாலிபர் சரணடைந்தார்.
ஜெசிந்தா பாண்டியன் கொலை தொடர்பாக சரணடைவதாக அவர் நீதிபதியிடம்தெரிவித்தார். அவர் கூலிப்படையைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.மோகனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மோகனை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கும்போது ஜெசிந்தாபாண்டியன் கொலை வழக்கில் பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என்றுதெரிகிறது.
இதற்கிடையே இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று எனக்குத் தெரியும்.. ஆனால்அதை போலீசிடம் சொல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார் பசுபதி.
INDIA NEWS |