அமைச்சர் ராமசாமியின் சீட் பறிப்பு: பழனி அதிமுக வேட்பாளரும் மாற்றம்
சென்னை:
மொடக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தஅறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி நீக்கப்பட்டு வேறு வேட்பாளர்அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதே போல பழனி தொகுதி அதிமுக வேட்பாளரையும் முதல்வர் ஜெயலலிதா கடைசிநேரத்தில் மாற்றியுள்ளார்.சட்டசபைத் தேர்தலில் அதிமுக 182 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கானவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் பல வேட்பாளர்கள் மாற்றப்பட்டு விட்டனர்.
முதல் வேட்பாளராக அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து மாற்றப்பட்டார். அதுதொடர்ந்தது. இந் நிலையில் இப்போது மேலும் 2 வேட்பாளர்களை முதல்வரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாற்றியுள்ளார்.
மொடக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அமைச்சர்பி.சி.ராமசாமி தற்போது மாற்றப்பட்டு விட்டார். அவருக்குப் பதில்வி.பி.நமச்சிவாயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல பழனி (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த தமிழரசிமாற்றப்பட்டு பிரேமா புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில் இந்தமாற்றங்களை ஜெயலலிதா செய்துள்ளார்.