ஸ்டாலினுக்கு எதிராக இன்று சரத்குமார் பிரசாரம்
சென்னை:
அதிமுகவில் சேர்ந்துள்ள நடிகர் சரத்குமார் இன்று சென்னையில் அதிமுக கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்.
திமுகவில் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி சரத்குமாரும், அவரது மனைவிராதிகாவும் அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில்அதிமுகவில் இணைந்துள்ளனர்.அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம்செய்வேன் என்று சரத்குமார் அறிவித்தார்.
இதையடுத்து இன்று முதல் அவர் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். மாலை 5மணிக்கு சென்னை பிராட்வேயில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்று சாமிகும்பிட்டு விட்டு தனது பிரசாரத்தை ஆரம்பிக்கிறார்.
முதலில் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் தி.நகர்கலைராஜன், ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடும்ஆதி ராஜாராம் ஆகிய அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்.
சென்னைப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை தூத்துக்குடி, 22ம் தேதிகன்னியாகுமரி, 23ம் தேதி திருநெல்வேலி, 24ம் தேதி விருதுநகர், 25ம் தேதி மதுரை,
26ம் தேதி திருச்சி, 27ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், 28ம் தேதிகடலூர், 29ம் தேதி திருவண்ணாமலை, 30ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி,
மே 1ம் தேதி சேலம், 2ம் தேதி ஈரோடு, 3ம் தேதி கோவை, 4ம் தேதி திண்டுக்கல், 5ம்தேதி ஆண்டிப்பட்டி, 6ம் தேதி தேனி மாவட்டம் ஆகிய ஊர்களில் பிரசாரம் செய்கிறார்சரத்குமார்.