27ம் தேதி சோனியா வருகை-2 நாள் பிரசாரம்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 27ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றும்,அதற்கு அடுத்த நாளும் அவர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப்பிரசாரம் செய்கிறார்.
சட்டசபைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து மக்கியக்கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ்தரப்பில் அகில இந்தியத் தலைவர்கள் யாரும் இன்னும் பிரசாரத்திற்கு வரவில்லை.இந் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற 27ம் தேதி தமிழகம்வருகிறார். அன்று மாலை ஈரோட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில்உரையாற்றுகிறார். இதில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
28ம் தேதியும் அவர் தமிழகத்தில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார். சோனியாவருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2ம் நாள் கூட்டத்தில் சோனியாவுடன், கருணாநிதி, ராமதாஸ், கிருஷ்ணசாமி,தா.பாண்டியன், வரதராஜன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டம் எங்கே நடக்கும் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. சென்னைஅல்லது மதுரையில் இக் கூட்டம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிமுக எம்.பிக்களையும் திமுக கணக்காக காட்டி அமைச்சர் பதவிகளை திமுக வாங்கிவிட்டது. இதை மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் என்னிடம் சொன்னார்கள்என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது குற்றச்சாட்டுக்கு சோனியா காந்தி மூலம் இக் கூட்டங்களில் பதில் தர திமுகதிட்டமிட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள வருகிறார். அவர்மே முதல் வாரத்தில் வருவார் என்று தெரிகிறது.