For Daily Alerts
Just In
அதிமுக எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம்
சென்னை:
நாகர்கோவில் தொகுதியில் மதிமுக வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிடும்தற்போதைய தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கட்சியிலிருந்துநீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு நாகர்கோவில் தொகுதிஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர்ரத்தினராஜ் போட்டியிடுகிறார்.நாகர்கோவில் சீட் மீண்டும் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த தற்போதைய அதிமுகஎம்.எல்.ஏவான ஆஸ்டின் அதிருப்தி அடைந்து போட்டி வேட்பாளராக, சுயேச்சையாகவேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந் நிலையில் ஆஸ்டினைக் கட்சியிலிருந்து நீக்கி முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சியின் குறிக்கோள், கோட்பாடுகளுக்குமுரணாக நடந்து கொண்டதாலும் ஆஸ்டின் கட்சியின் அடிப்படை உறுப்பினர்பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாகஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Comments
Story first published: Saturday, April 22, 2006, 5:30 [IST]