தமிழர்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டார் கருணாநிதி: பாஜக
காஞ்சிபுரம்:
இலவச அறிவிப்புகள் மூலம் தமிழர்களை பிச்சைக்காரர்கள் நிலைக்குக் கொண்டுசென்று விட்டார் கருணாநிதி என அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன்கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பாஜக வேட்பாளர் ராகவனை ஆதரித்து இல.கணேசன் பிரசாரம்செய்தார். அப்போது,மக்களின் அடிப்படைப் பிரச்சினையைச் சொல்லி திமுக வாக்கு கேட்ட காலம் போய்விட்டது. இப்போது கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளைச் சொல்லி ஓட்டுக்கேட்கும் நலைக்கு திமுக போய் விட்டது.
பொது மக்களுக்கு அறிவிப்பு கொடுக்கும்போது எதைக் கொடுக்கலாம், எதைகொடுக்கக் கூடாது என்ற சிந்தனை வேண்டும். ஆனால் சுயமரியாதை, தன்மானம்உள்ள தமிழனாக மேடையில் முழங்கி விட்டு, தமிழர்களை இலவசம் என்றஅறிவிப்புகளால் கருணாநிதி பிச்சை ஏந்தும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்.
மத்தியில் வலுவாக இருந்து வந்த காங்கிரஸ் பின்னர் பலவீனமடைந்து இன்றுகூட்டணி ஆட்சியை அமைத்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் திமுகபலவீனமடைய ஆரம்பித்துள்ளது. கூட்டணி ஆட்சிக்கும் தயார் என்று கருணாநிதிகூறியிருப்பது இதையே காட்டுகிறது.
ஆட்சிக்கு வர மாட்டோம், வெற்றி பெற மாட்டோம் என்ற எண்ணத்திற்கு கருணாநிதிவந்து விட்டார்.
வருகிற தேர்தலில் பாஜக, திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு நல்ல மாற்றாகஅமையும். தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம் என்றார்கணேசன்.