சொன்னத செய்வோம்-மதுரையில் கருணாநிதி உறுதி
மதுரை:
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அத்தனையும் நிறைவேற்றப்படும்என்று மதுரையில் நடந்த மிக பிரமாண்டமான பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
மதுரையில் மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் நடந்த கருணாநிதியின்கூட்டத்துக்கு மிகப் பெரும் கூட்டம் கூடியது. ஆனால், அதைக் கட்டுப்படுத்த போதியபோலீசார் இல்லை.இதனால் சலசலப்புக்கிடையே அந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசினார். அவர்கூறியதாவது:
திமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுகவின் கருத்துக்கள் மட்டும் இடம்பெறவில்லை.அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் எண்ணங்களும் அதில் பிரதிபலித்துள்ளன.
இதுவரை இந்தியாவில் எந்தக் கட்சியும் இப்படி ஒரு தேர்தல் அறிக்கையைதரவில்லை என்று கூறப்படும் அளவுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கை மிகச் சிறப்பாகஅமைந்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அத்தனை வாக்குறுதிகளும்நிறைவேற்றப்படும். இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு, விவசாயிகளுக்கான கடன்தொகை தள்ளுபடி, தரிசு நிலம் பகிர்ந்தளிப்பு என அத்தனை திட்டங்களையும்சொன்னபடி நிறைவேற்றுவோம்.
13 மத்திய அமைச்சர்களும் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு நான்வாயால் பதில் சொல்வதை விடுத்து செயலால் காட்டிக் கொண்டிருக்கிறோம்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதைநிறைவேற்றியது மத்திய அரசு. கேவலம் இந்த கருணாநிதியின் கோரிக்கையால்தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருக்கிறது என்றார் கருணாநிதி.