சாதி கலவரத்தை ஏற்படுத்த திமுக சதி: வைகோ
மதுரை:
தேவர் சமுதாயத்தினருக்கும், தலித் மக்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி,சாதிக் கலவரத்தை உண்டுபண்ண திமுக தலைவர் கருணாநிதி சதி செய்வதாக மதிமுகபொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் வைகோ பேசுகையில்,கடந்த ஐந்து ஆண்டுகளில் கலைஞர் ஆற்றிய ஜனநாயக பணி என்ன?.சட்டமன்றத்திற்குப் போனாரா? அங்கு மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்தாரா?எம்.ஜி.ஆர். போனாரா என்று திருப்பிக் கேட்கிறார்கள்.
என் மடியில் விழுந்த கனி என்று அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவர்பேச முயன்றபோது மைக்கை ஆப் செய்தது யார்? ஏழைகளின் இதயத்தில்கல்வெட்டாக பதிந்து போன எம்.ஜி.ஆர். மீது சட்டசபையில் செருப்பு வீசியது யார்?அதனால்தான் அவர் சட்டசபைக்குப் போகவில்லை.
அதேபோல பெண் என்றும் பாராமல் முதல்வர் ஜெயலலிதாவைத் தாக்கி களங்கம்ஏற்படுத்தியது யார்?
இத்தனையும் அவர் கண் முன்னால் நடந்தபோது கலைஞர் தடுத்தாரா? அதனால்தான்ஜெயலலிதா சட்டசபைக்குப் போகவில்லை. ஆனால் நீங்கள் ஏன் போகவில்லை.உங்களை யாரும் உள்ளே அனுமதிக்கவில்லையா?
சிறுத்தைகள் நடமாடும்போது சிங்கங்கள் நடமாடக் கூடாதா என்று ஆண்டிப்பட்டியில்கூறியுள்ளார் கலைஞர். இது சாதாரண வார்த்தையல்ல. விஷம் தோய்ந்த வார்த்தை.
முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் அமைதியாக இருப்பதுஅண்ணனுக்குப் பிடிக்கவில்லை. அவரது ஆட்சியில் அண்ணன், தம்பிகளாக இருந்தபல்வேறு சமுதாயத்தினரும் ஒருவரை ஒருவர் அரிவாள்களாலும், கம்புகளாலும்தாக்கப்பட்டு ரத்தம் சிந்திக் கொண்டனர்.
ஓட்டுக்காக அந்த பாவத்தை நீங்கள் மீண்டும் செய்ய வேண்டாம். தலித்துகளும்மறவர்களும் சகோதரர்களாகவே இருக்கட்டும். நாடார் குலத்தினரும், தலித்துகளும்சகோதரர்களாகவே இருக்கட்டும்.
தேவரின மக்களுக்கும், தலித்துகளுக்கும் இடையே மோதலை உருவாக்க கருணாநிதிமுயற்சிக்கிறார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் என்றார் வைகோ.