கலர் டிவி-தா.பாண்டியன் சேம் சைட் கோல்!
திருநெல்வேலி:
கலர் டிவி திட்டம் தரும் திட்டத்தைத் தடுக்க முடியாது. அதேசமயம், கலர் டிவிஇப்போது அவசியமற்ற ஒன்று என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர்தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் பேசுகையில்,திமுக தேர்தல் அறிக்கையில் இலவச டிவி தரும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.கொடுப்பதை தடுப்பது நன்றாக இருக்காது. மக்களும் அதை விரும்ப மாட்டார்கள்.ஆனால் கலர் டிவி அத்தியாவசியத் தேவை அல்ல. மக்கள் வரிப்பணம் இதில்பயன்படுத்தப்பட்டால் அது வீண் விரயம்.
இத்திட்டத்தை விமர்சிப்பதை இப்போது விட்டு விட்டு அதை எப்படிக் கொடுக்கப்போகிறார்கள் என்ற விமர்சனத்தை மட்டும் செய்யலாம்.
காவிரி நடுவர் மன்றத்தின் புதிய தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பேரிடியாகஅமைந்துள்ளது. இந்தப் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகத்தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
நர்மதா அணை விவகாரத்தில் காட்டும் அதே அளவிலான ஆர்வத்தை,முக்கியத்துவத்தை காவிரிப் பிரச்சினைக்கும் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிபங்கேற்காது. திமுக தனித்து ஆட்சி அமைக்கும், அதில் எந்தக் குழப்பம் ஏற்படாதுஎன்று நம்புகிறோம் என்றார் பாண்டியன்.
திமுகவின் இலவச கலர் டிவி திட்டத்தை மறைமுகமாக விமர்சித்து சேம் சைட் கோல்போட்டுள்ளார் தா.பாண்டியன்.