ஜெ சொத்து முடக்கம்-வழக்கை விசாரிக்க தடை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து முடக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்கசென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு தல் 1996ம் ஆண்டு வரை வருமானத்திற்கும் அதிகமாக ரூ.69.6 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான வழக்குபெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக கடந்த 1997ம் ஆண்டு 11 நிறுவனங்களின் (இதில் ஜெ, சசிமற்றும் அவர்களது ஆட்களின் முதலீடு உள்ளது) சொத்துக்களை முடக்க சென்னைசிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவை அனைத்தும் அசையாச் சொத்துக்கள்ஆகும்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா மற்றும் 5 நிறுவனங்கள் சார்பில்சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில்இருக்கும்போது இந்த மனுக்களை விசாரிக்க சிறு வழக்குகள் நீதிமன்றத்திற்குஅதிகாரம் கிடையாது, எனவே வழக்கை விசாரிக்கக் கூடாது என்று கோரி திமுகபொதுச் செயலாளர் அன்பழகன் சிறு வழக்குகள் நீதிமன்றத்திலும், சென்னைஉயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயபால், சிறு வழக்குகள்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்களை விசாரிக்க தடை விதித்தார்.
அதற்கான அதிகாரம் சிறு வழக்குகள் நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் அவர் தனதுதீர்ப்பில் தெரிவித்துள்ளார்.